மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தில்
வரிசையில் சென்று கொண்டிருந்தன
சின்னஞ்சிறு எறும்புகள்..
உணவைப் பருகியவாறு குதித்துக்கொண்டு ஓடியது
அழகிய அணில் கூட்டம்..
யாருமில்லாத அறையில்
சத்தம் போட்டுக்கொண்டிருந்தன
இரண்டு பல்லிகள்,
மேஜைமேல் வைத்திருந்த புத்தங்கங்களை
வாசித்துக்கொண்டிருந்தன
வெளிச்சமும் இருட்டும்!
---------------------------------------------------------------
மூடப்பட்டிருந்த பூங்காவில்
ஆடிக்கொண்டிருந்தன இரண்டு பறவைகள்..
ஓடிக்கொண்டிருந்தன இரண்டு அணில்கள்..
நடந்துகொண்டிருந்தன பல எறும்புகள்
பறந்துகொண்டிருந்தன சில இலைகள்
இவற்றை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன் வாயிற்கதவை பிடித்தபடி!
No comments:
Post a Comment