Sunday, 4 February 2024

தாய்மை

 பிரசவ அறைக்குள்
கண்ணீருடன் சென்ற அவளின் கண்களில்
உணர்ந்தேன் தாய்மையை!

நந்தியாவட்டை!

கவிதை எழுதவில்லை                                                                     
சரியாகக் கவனிக்கவில்லை 
பக்கம் நடந்து செல்லவில்லை 
தண்ணீர் ஊற்றவில்லை 
குப்பையென எண்ணிக் கண்டுகொள்ளவில்லை 
ஆனாலும் தினம் தவறாமல் 
மலர்ந்து விடுகிறது பூக்கள்
இந்த நந்தியாவட்டை மரத்தில்
என் வாயிலை அலங்கரிக்க!