Sunday, 4 February 2024

நந்தியாவட்டை!

கவிதை எழுதவில்லை                                                                     
சரியாகக் கவனிக்கவில்லை 
பக்கம் நடந்து செல்லவில்லை 
தண்ணீர் ஊற்றவில்லை 
குப்பையென எண்ணிக் கண்டுகொள்ளவில்லை 
ஆனாலும் தினம் தவறாமல் 
மலர்ந்து விடுகிறது பூக்கள்
இந்த நந்தியாவட்டை மரத்தில்
என் வாயிலை அலங்கரிக்க!

No comments:

Post a Comment