கவிதை எழுதவில்லை
சரியாகக் கவனிக்கவில்லை
பக்கம் நடந்து செல்லவில்லை
தண்ணீர் ஊற்றவில்லை
குப்பையென எண்ணிக் கண்டுகொள்ளவில்லை
ஆனாலும் தினம் தவறாமல்
மலர்ந்து விடுகிறது பூக்கள்
இந்த நந்தியாவட்டை மரத்தில்
என் வாயிலை அலங்கரிக்க!
No comments:
Post a Comment