Sunday, 6 February 2022

காதல்... காதல்....

பதட்டம்

தூக்கமின்மை 

பசியின்மை

தனிமைப் புலம்பல்கள் 


அட பரீட்சை அல்ல ...........

காதல்! 


அகல் விளக்கின் ஒளியில் 

மின்னும் அவளின் முக ஞாபகம்  

அந்த மின்சாரம் இல்லா இரவில்கூட

சிறு புன்னகையைத் தரும்!


காலை சூரியனைத் தட்டி 

சீக்கிரம் வரச்சொல்லும் 

காதலின் அவசர அவஸ்தை

அவளின் ஒரு அழைப்புக்குப் பிறகு  

அமைதி அடையும்!


காலமாற்றம் போல 

மனம் முழுதும் ஒரு வித 

வினோத மாற்றம்

அதை அனுபவித்த

காதல் கிருக்கர்கள் ஏராளம்! 


இது என்ன அதிசயம் 

காலமும் நேரமும் 

காதலுக்கு விடுமுறை தந்ததே!

இருபத்தி நான்கு மணி நேரமும் 

ஸ்தம்பித்துப் போகுதே!


இரவு பத்து மணிக்கு முடிந்த 

அந்த நூறு இலவச குறுஞ்செய்தி 

நள்ளிரவில் புதுப்பித்து 

இரவை உறங்கச் செய்யுதே!


இதயத்தை மட்டும் கேட்கும் 

காதல் ஒரு 

சுயநலம் இல்லாத 

சுகமான உணர்வுதான்! 


காதல் எனும் 

மூன்றெழுத்து மந்திரம் 

செய்யும் தந்திரம் 

நம் உடலை எந்திரம் போலச் 

சுழலவைக்கும்...

சலிப்பில்லாமல் களைப்பில்லாமல்!


போதாது ஒரு ஜென்மம் 

காதலை உணர,..


பிரிந்த பின்பும் 

நினைவுகளைத் தந்து 

எண்ணிய வாழ்கையைக் 

கடந்து செல்ல ஒரு 

சுமையான பாலமாய் 

காதல்... காதல்....


No comments:

Post a Comment