காலம் கடந்த பின்பும்
முதல் காதல் மறைவதில்லை
பிரிவைக் கடந்த பின்பும்
முன் நிகழ்வை மறக்கவில்லை
இதயம் கடக்க மறுத்தும்
காலம் கடக்க வைத்த
நம் காதல்
காலத்தின் வற்புறுத்தலே
காலை விழித்ததும்
கண்கள் கைப்பேசியைத் தேடியதே
உன்னிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் காணாது
கைப்பேசியும் செயலிழந்ததே
உன் பிறந்த தினம் அதில்
உன்னை வாழ்த்தவே மனம் துடிக்குதே
வாழ்த்தியபின் படபடத்து வானில் திரியும் பட்டாம்பூச்சியாய் மனம் பறந்ததே
ஒரு செயலில் இரு உணர்வுகளை
உணர்த்துவது காதலே!
என்
முற்றுப்பெறாத கவிதையைப் போல
முற்றுப்புள்ளி வைக்கமுடியாத நம் காதல்
போதும் எனக்கு.....
முதல் காதல்
முதல் கவிதை
முதல் வெட்கம்
அடி வயிற்றுப் பட்டாம்பூச்சி
முடிவுறாத உன் நினைவுகள்
போதும் எனக்கு.........
No comments:
Post a Comment