Friday, 31 July 2020

கடல்!

கடலைப் பொருத்தவரை கரை ஒன்றுதான்
கரையைப் பொருத்தவரை கடல் ஒன்று தான்
கடலுக்குக் கப்பலும் ஒன்று தான் படகும் ஒன்றுதான்

இந்தக் கடலுக்கும் கரைக்கும் நடுவே இருக்கும்
மண்ணில்,

பல கால் தடங்கல் இங்கே அதற்குரிய கால்கள் தான் எங்கே?

இங்கே இந்தக் கரை மணலின் தடம் பதித்த பதிக்கின்ற
மனிதர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் எத்தனை வாழ்க்கை பரிமாணங்கள்

பள்ளி சென்று விடுமுறை கழிக்கும் பிள்ளைகளும் இங்கே
விடுமுறை இல்லாத வேலை செய்யும் சிறார்களும் இங்கே.
பஸ்ஸில் பயணித்து வரும் ஏழைகளும் இங்கே
காரில் வரும் பணக்காரர்களும் இங்கே
மீன் வறுவலின் வாசமும் இங்கே
வெங்காய பஜ்ஜியின் வாசமும் இங்கே
பஞ்சிமிட்டை விற்பவனும் இங்கே
சோம்பப்படி விற்பவனும் இங்கே
சுண்டல் விற்பவனும் இங்கே
சுக்கு காபி விற்பவனும் இங்கே
ஒருதலைக் காதலனும் இங்கே
உச்சி வெயில் காதலர்களும் இங்கே
பிட்சை எடுக்கும் பிள்ளைகளும் இங்கே
பிட்சைப் போடும் பிள்ளைகளும் இங்கே
குதிரையும் இங்கே
நாய்களும் இங்கே
பொம்மை விற்பவனும் இங்கே
பொம்மை வாங்குபவனும் இங்கே
உப்பு காற்றும் இங்கே
ஊத காற்றும் இங்கே
சூரியன் அஸ்தமனம் இங்கே
கருமேகம் உற்பத்தியும் இங்கே

இப்படி அனைத்து கால்தடங்களையும்,பரிமாணங்களையும் தாங்கிக்கொள்ளும் இந்தக் கடல் மணல்கள் என்றும் இங்கே
இதைக் கடந்து சென்ற மனிதர்கள் எங்கே??

No comments:

Post a Comment