சுழல்கின்ற இந்த பூமியில்
கடிகாரமாய் ஓடும் மனிதர்கள்
இருளில் ஒளி தரும் நிலவு
பகலை இருளவைக்கும் மேகம்
கத்திரியில் வாடும் மரங்கள்
மழையால் குளிரும் பூமி
இப்படி அன்றாட உலக நிகழ்வுகள் நிகழ
அதை அமைதியாய் பார்த்துக்கொண்டு
சுழலாமல் நிற்கின்றேன் நான்
என் வாழ்வின் அர்த்தத்தை தேடி!
No comments:
Post a Comment