Wednesday, 27 May 2020

குடை

குடை 
-----------
தான் நனைந்தும் தன் பிள்ளைகள் நனையாமல் இருக்க, அன்னை போர்த்தும் சேலையை நினைவூட்டும் - 
ஒரு சிறு தலை கவசம் 
-----------------------
மழையில் நனைந்த பிள்ளைகளை  வீட்டுள் அழைத்து தலையை துவட்டிவிடும் அன்னையின் பாசத்தை அறியாத ஒரு பிள்ளையாக உன்னை வாசலோடு வைத்துவிட்டு வருவது ஏனோ?! 
------------------------
நான் நனையாமல் இருக்க சுமந்து செல்லும்  உன்னை, நீ நனைந்த பின் சுமக்க மறுக்கிறேன்.

No comments:

Post a Comment