குடை
-----------
தான் நனைந்தும் தன் பிள்ளைகள் நனையாமல் இருக்க, அன்னை போர்த்தும் சேலையை நினைவூட்டும் -
ஒரு சிறு தலை கவசம்
-----------------------
மழையில் நனைந்த பிள்ளைகளை வீட்டுள் அழைத்து தலையை துவட்டிவிடும் அன்னையின் பாசத்தை அறியாத ஒரு பிள்ளையாக உன்னை வாசலோடு வைத்துவிட்டு வருவது ஏனோ?!
------------------------
நான் நனையாமல் இருக்க சுமந்து செல்லும் உன்னை, நீ நனைந்த பின் சுமக்க மறுக்கிறேன்.
No comments:
Post a Comment